Friday 22 May 2015

OM POSITIVE USEFULL MESSAGE 1 [ ராசி விநாயகர் வழிபாடு ]

ஜெய்மாம் லக்ஷ்மி  வாசகர்களே எங்கள் வாசகர்கள் எல்லா செல்வங்களும் பெற வேண்டும்.அதற்கு   எண்கணித நிபுணர் வேண்டும் என்று தேடிய போது அதிர்ஷ்ட பெயர் வைப்பதில் அற்புதமானவர் என்று அனுபவப்பட்ட என் நண்பர்கள் அறிமுகப்படுத்தினார்கள் கணேச உபாசகர்,கணேச பிரேமி ஓம் பாசிட்டிவ்  ஆர்.பி.ஓம் ஐயா அவர்களை. எங்கள் வெப்சைட்டுக்கு அதிர்ஷ்ட  பெயர் வேண்டும் என்று கேட்ட போது எங்களுக்கு பெயரும் வைத்து ஆன்லைன் ஜாபும் தந்தார்.வாசகர்களே நமக்காக நல்ல விஷயங்களை எழுதவும் ஒப்புக்கொண்டார். 

அன்பான, “ஜெய்மாம் லக்ஷ்மி ”  ஆன்மீக  அன்பர்களே,  நமது   ”   “ஓம் பாஸிட்டிவ் யூஸ்ஃபுல் மெசேஜ்"பகுதியில் இனி   “குருஜி  ரங்கநாத   ஸ்ரீநிவாசசித்தரின்சீடர்  கணேச பிரேமி,  திரு. ஆர்.பி.ஓம்  மஹராஜ்அவர்கள்   ஆன்மீக,பரிகாரம், வைத்தியம், முத்திரை,அதிர்ஷ்ட பெயர் எண்கணிதம் தொடர்பான  தகவல்களை  அளிக்கவிருகிறார்கள். 
திரு. ஓம் அவர்கள் பற்றி சிறு அறிமுகம்
குருஜி  ரங்கநாத   ஸ்ரீநிவாசசித்தர்" அவர்களிடம்  உண்மையான இந்திய ஆன்மிக கலைகளான யோகம் தியானம்,மந்த்ரம் ,யந்த்ரம்,தாந்த்ரீகம்,ஆருடம்,பிரம்மலிபி பரிகாரம்,கர்ம நிவாரண பயிற்சி, கணேச உபாசனை,சித்தர் உபாசனை, தெய்விக மாந்த்ரிகம்,கருணை மிகுந்த சன்மார்க்க நெறிகள்,வைத்தியம்பிரணவகிரியா யோகம் முதலிய பல அரிய விஷயங்களை பயின்று  அதில் பூரணத்துவம்  பெற்றுளார்.  
அன்பர்களாகிய  நீங்கள்  வாழ்வில் முன்னேறவும், சகலசௌபாக்யங்களையும்,பெற்று  மன அமைதியுடனும், நீண்ட  நல்ஆரோக்யத்துடனும்   ஆனந்தமாக  வாழவும், அனைத்து  விஷயங்களையும், விநாயகரின்  வழிபாட்டின்  மூலம்  தங்களுக்கு  அளிக்க உள்ளார். அப்பொக்கிஷத்தை  நீங்களும்  படித்துணர்ந்து  மற்றவர்களையும் படிக்கச் செய்து,இப்புண்ணிய  கைங்கர்யத்தில்  பங்கெடுத்துக் கொள்ளுங்கள். குடிக்க கற்று கொடுத்தால் வாழ்க்கை கெட்டு போகும்.நல்லதை படிக்க கற்று கொடுத்தால் புண்ணிய பலத்தால் அவர்களின் தீவினைகள் அற்றுபோகும்.

இனி அவரது தெய்விகப் பணி தொடரும்.........

ஓம் 
என் அன்னையின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் குருநாதர் ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீநிவாச சித்தரின் திருப்பாத கமலம் சரணம்
என் காதல் நாயகன் ,நண்பன்,மதா பிதா குரு தெய்வம் என அனைத்துமாய் விளங்கும்  விநாயகபெருமான் திருப்பாத கமலம் சரணம்

ஜோதிட ரீதியாக விநாயகர் வழிபாடு:-
1. மேடம், கடகம், துலாம், மகரம் ஆகிய சரலக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க சித்திரை, உத்திராடம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் 

வளர்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு பின்னர் வரும் 1மணி 30 நிமிடத்திற்குள் அதாவது காலை 6.00 மணி முதல் 7.30 க்குள் தேங்காய் உடைத்து அருகம்புல்லினால் விநாயகரை அர்ச்சனை செய்து சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேனும் பாலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகமும், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப்பயறும் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். மேற்கூறிய லக்னங்கள் உதிக்க மற்றய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய், சனிக் கிழமைகளில் தேங்காய் பலி கொடுத்து, செவ்வரலி புட்பத்தினால் வினாயகரை அர்ச்சனை செய்து, பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
2. ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது காலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய் உடைத்து வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளரலி மலர் அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து, பசும் பால், அவல், கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் காலை 5.15மணி முதல் 6.45மணி வரையிலான காலத்தில் தேங்காய் உடைத்து மல்லிகைப் பூ அல்லது முல்லைப் பூ அல்லது செந்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து பசும் பால், பால்பாயாசம், பானகம் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
ஓம்
முக்கிய குறிப்பு :மிகச்சரியாக வழிபாடு செய்வது என்பது உங்கள் பிரச்சனைக்கான காரண காரிய அமைப்புகளை பிரம்ம லிபிபரிகாரத்தின் மூலம் ஆராய்ந்து குரு தருகிற உபாசனா மந்திரத்தின் மூலம் வழிபட வேண்டும்.
ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்

ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!

கணேஷ் மஹராஜனின் திரு அருளால் நீங்கள் எப்படி இருந்தாலும்
உங்கள் ஜாதகம் [ பிரம்ம லிபி  தலை எழுத்து ] எப்படி இருந்தாலும்
இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
அன்பெனும் ஆல மரமாய் நாம் பரந்து விரிந்து அதன் ஈர நிழலில்
சகல ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைபோம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்  
ஏதேனும் சந்தேகங்களுக்கு கீழ் கண்ட அழைத்தால் விளக்கம் கிடைக்கும்
உங்கள் பெயர்,செல் எண் ஈ மெயில் மெசேஜ் செய்துவிட்டு பின்பு அழைக்கவும்


No comments:

Post a Comment